/tamil-ie/media/media_files/uploads/2023/08/OPR.jpg)
ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருமணமான பெண் ஒருவர், ஓ.பி. ரவீந்திரநாத் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், “ஓ.பி. ரவீந்திரநாத் என்னிடம் தவறாக பேசினார். நான் அவரிடம் நாம் இருவரும் 8 வருடத்துக்கு மேலாக பேசியுள்ளோம்.
நான் உங்களிடம் தங்கையாகதான் பேசினேன்" என்றேன். மேலும், நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்கள்தான். ஆனால் சமீபகாலமாக என்னிடம் அவர் தவறாக பேசுகிறார்.
ஓ.பி.ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி மூலம்தான் எனக்கு அவர் பழக்கமானார். நானும் எனது கணவரை விவாகரத்து செய்துள்ளேன். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவி அண்ணா போனில் இருந்து, ரவி அண்ணா என்னை விரும்புவதாக வேறோருவர் பேசினார்.
நான் அவரை அண்ணணாக நினைக்கிறேன். ஆனால் அவர் என்னிடம் தவறாக நடக்கிறார். தினமும் இரவில் வீடியோ கால் வரச் சொல்லி தொந்தரவு செய்கிறார்.
ரவீந்திரநாத் வேறோரு பெண்ணிடமும் தொடர்பில் உள்ளார். அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில்தான் விவாகரத்து நடந்தது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.
இதில் நான் தலையிட விரும்பவில்லை. ரவீந்திரநாத்தின் தொந்தரவு குறித்து நான் ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறிவிட்டேன். அதை பொறுமையாக கேட்ட அவர், “அவன் தாயின் விசேசத்துக்கு கூட வரவில்லை” என வருத்தப்பட்டார்.
தொடர்ந்து, தான் சொல்லி அவர் கேட்பதில்லை எனவும் கூறினார். இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் தொந்தரவு தினமும் அதிகரித்து காணப்படுகிறது என்றார். மேலும் தாம் இந்த விவகாரத்தை முதன் முதலில் அவரது மனைவியிடம்தான் தெரிவித்தேன் என்றார்.
முன்னதாக தனக்கு இரு குழந்தைகள் இருப்பதும், தற்போது அச்சத்தில் உள்ளதாகவும் அந்தப் பெண் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.