/indian-express-tamil/media/media_files/M59vnjtSbwhK0ZZHexMS.jpg)
கோவையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பூலாம்பட்டி வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப் பகுதிக்கு விரட்டினர். பின்னர் மீண்டும் இரவு பத்து மணியளவில் வந்த ஒற்றைக் காட்டு யானை ஆக்ரோஷமாக அங்கு, இங்கும் சுற்றி திரிந்ததால் யாரும் காட்டு யானை அருகே செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் கூறினர்.
இருந்த போதிலும் யானையை விரட்ட விராலியூர் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 24) மற்றும் அவருடைய நண்பர் ஹரிஷ் (வயது 22) ஆகியோர் முற்பட்டனர். இதில் ஹரிஷ் தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். கார்த்தி பெயிண்டராக வேலை செய்துவந்தார்.
A young man died after being attacked by a wild elephant in Coimbatoreயானை தூக்கி வீசியதில் இளைஞர் உயிரிழப்பு; ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை #coimbatorediaries
Posted by IETamil on Monday, July 29, 2024
இருவரும் குடியிருப்பு பகுதிக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட பின்னாடியே ஓடிச் சென்று உள்ளனர். ஆக்ரோஷத்தில் இருந்த காட்டு யானை இவர்களைப் பார்த்து திரும்பி தாக்க தொடங்கியது. அதில் ஹரிஷ் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். யானை துரத்தியதில் தடுமாறி கீழே விழுந்த கார்த்தியை யானை தூக்கி வீசி மிதித்து சென்றதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஹரிஷ் அங்கு உள்ள டாட்டா ஏ.சி வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.