தமிழ்நாடு அரசு புதிதாக அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், “ஆதார் எண் உடன் மின் நுகர்வோர் எண்-ஐ இணைந்திருந்தால் மட்டுமே முதல் 100 யூனிட் இலவச மின்சாரமும் மானிய விலை மின்சாரமும் வழங்கப்படும்” எனத் கூறப்பட்டுள்ளது.
இதனால், வீட்டு மின்சார உபயோகிப்பாளர்கள், விவசாயத்துக்கு தேவையான விவசாய மின் இணைப்புகள், சிறிய அளவிலான கைத்தறி, விசைத்தறி பயனர்கள் ஆகியோர் என அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் எதிர்ப்பையும், வரவேற்பையும் ஒருசேர பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த அறிவிப்பில் சில நன்மைகளும் உள்ளன என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இதன் மூலம் போலி இணைப்புகளை கண்டறிய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் வாங்கியிருந்தாலும் அவர்கள் சிக்கிக் கொள்வார்கள்.
மேலும் வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள், முறையாக அனுமதி பெற்று முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil