தமிழக அரசு மக்களுக்காக பல நலத் திட்டங்கள் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அவற்றை தமிழக மக்கள் முழுமையாக பெறுவதற்கு ஒவ்வொருவரின் ஆதார் எண்ணும் தேவை என்று கூறுகின்றனர்.
சமீபமாக, மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
அதற்கான பணிகள் தமிழகமெங்கும் தீவிரமான நடைபெற்று வரும் வேளையில், தற்போது தமிழக அரசின் நலத் திட்டங்களை மக்கள் பெறுவதற்கு தங்களது ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு நிதித்துறை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil