தி.மு.க அமைச்சர்களில் பலர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவர் - ஆதவ் அர்ஜூனா

தி.மு.க அமைச்சர்களில் இன்னும் பல அமைச்சர்களை நீதிமன்றங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கும் என த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

தி.மு.க அமைச்சர்களில் இன்னும் பல அமைச்சர்களை நீதிமன்றங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கும் என த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
VCK leader Aadhav Arjuna explain about ED raids Tamil News

கோவையில் நடைபெற்ற இரண்டு நாட்கள் பூத் கமிட்டி கருத்தரங்கத்தை முடித்து கொண்டு கோவை விமான நிலையத்தில் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா சென்னை கிளம்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக ஆளும் கட்சி என்பதால் அவர்களை எதிர்க்கிறோம்.

Advertisment

 மற்ற கட்சிகள் 25 சதவீதம் வரட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். தங்கள் தலைவரை நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம். ஆனால் தவெக தலைவரை பார்க்க வரும் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை எனவே அதனை சீரியஷாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் சட்டபோராட்டம் மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்" என்றார். மேலும் இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு இன்னும் பல அமைச்சர்களை நீதிமன்றங்கள் அவர்களது பதவியில் இருந்து விடுவிக்கும் அதனை மக்கள் பார்க்க போகிறார்கள் என்றார்.

TVK Dmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: