ஆவின் பால் பாக்கெட்டுகளில் இன்று ‘ஆயுத பூஜை’ மற்றும் ‘சரஸ்வதி பூஜை’ வாழ்த்து செய்தி இடம் பெற்று விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட தேசிய தினங்களுக்கும் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்து செய்தி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது.
ஆவின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்த பின் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளுக்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்தி இடம்பெற்றது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்றும் இந்தாண்டும் அனைத்து ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் என வாழ்த்து செய்தி அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“