/tamil-ie/media/media_files/uploads/2023/07/aavinb.jpg)
ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு
ஆவின் நிறுவனத்தின் சார்பில் விற்கப்படும் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில் பன்னீர் மற்றும் பாதாம் பவுடன் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
1 கிலோ பன்னீர் முன்பு ரூ. 450 விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 550 ஆக விலை உயர்ந்துள்ளது. 500 கிராம் பன்னீர் ரூ.250 விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பன்னீர் 200 கிராம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாதாம் மிக்ஸ் 200 கிராம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.