அ.தி.மு.க தலைமை முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்: செல்லூர் ராஜூ வேண்டுகோள்

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கட்சியின் தலைமை எடுத்துள்ள முடிவுகளை வரவேற்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கட்சியின் தலைமை எடுத்துள்ள முடிவுகளை வரவேற்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார்.

author-image
WebDesk
New Update
Sellur Raju 2

அ.தி.மு.க தலைமை முடிவை தொண்டர்கள் வரவேற்க வேண்டும்: செல்லூர் ராஜூ

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள நடவடிக்கைகளை கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் வரவேற்க வேண்டும் என்றும், தலைமை எடுக்கும் முடிவுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரை மாநகராட்சி, சோலைகளபுரம் பகுதியில், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தி.மு.க. ஆட்சியின் மீது குற்றச்சாட்டு

"அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகராட்சி தூய்மையான நகரமாகத் திகழ்ந்தது. ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில், இது 'குப்பை நகரமாக' மாறியுள்ளது. வரி விதிப்பில் நடந்த முறைகேடுகள் காரணமாக, மாநகராட்சி மேயர், பல மண்டலத் தலைவர்கள் மற்றும் குழுத் தலைவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். இதன் விளைவாக, சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதிலும் திமுக அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது."

அ.தி.மு.க தொண்டர்களுக்கு வேண்டுகோள்

"அ.தி.மு.க.வுக்கு உண்மையான எதிரி திமுக தான். இந்த மக்கள் விரோத, ஊழல் ஆட்சியை, வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவதற்காக அ.தி.முக. தொண்டர்கள் அனைவரும் பாடுபட்டு வருகின்றனர். கட்சித் தலைமை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் ஒட்டுமொத்த நலனுக்காக தலைமை எடுக்கும் முடிவுகளை அனைவரும் மதிக்க வேண்டும். தொண்டர்களுக்கு ஏதேனும் மனவருத்தங்கள் இருந்தால், அதை ஊடகங்களில் பேசி சலசலப்பை ஏற்படுத்தாமல், நேரடியாகத் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள நடவடிக்கைகளை ஒவ்வொரு தொண்டரும் மனதார வரவேற்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisment
Advertisements
Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: