எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து: வடமாநிலத் தொழிலாளர்கள் 9 பேர் பலி; 5 பேர் கவலைக்கிடம்

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் புதிய கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் வட மாநிலத் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் புதிய கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் வட மாநிலத் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
ennore accident 2

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் புதிய கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில், வட மாநிலத் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை (30.09.2025) நடந்த இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் புதிய கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானப் பணியில் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த கட்டுமான பணியின்போது, செவ்வாய்க்கிழமை மாலை ராட்சத வளைவின் முகப்புப் பகுதி  மற்றும் சாரம் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 5 பேர் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

Advertisment
Advertisements

எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Ennore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: