/indian-express-tamil/media/media_files/Ieut1nTH93pQeaV6H6RQ.jpg)
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு, கட்டுமானப் பணிகளுக்கான வைப்பு நிதியாக த.வெ.க தலைவர் ரூ. 1 கோடியை வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: “தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய், நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” என தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. நடிகர் சங்கம் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு, ரூ. 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்காக நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.
இதனால், தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் ஆகியோர் வரிசையில், நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.