Advertisment

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்

நடிகர் விஜய் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை சந்திக்க திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay

நடிகர் விஜய் (புகைப்படம் – விஜய்/ இன்ஸ்டாகிராம்)

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார் என்றும், சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஜூன் 3ம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு தொடர்ந்து அரசியல் வட்டத்தில் இருந்து வருகிறது. அவரது சமீபத்திய நடவடிக்கைகளும் அரசியலை நோக்கியே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றனர். அதனைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: சாவர்க்கார் பிறந்த நாளில் பாராளுமன்ற கட்டிடம் திறப்பு; வி.சி.க கண்டன ஆர்ப்பாட்டம்

இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற ஓட்டுகள் உள்ளிட்டவற்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து வருவது விஜயின் அரசியல் அச்சாரமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில், பட்டினி தினமான இன்று தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கினர்.

இதன் அடுத்தகட்டமாக நடிகர் விஜய் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் நிகழ்ச்சியில், பெற்றோர்கள் உட்பட சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment