/tamil-ie/media/media_files/uploads/2022/09/vishal-1200.jpg)
நடிகர் விஷால்
தன் வீட்டை மர்ம நபர்கள் தாக்கிவிட்டனர் என நடிகர் விஷால் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் சார்பாக அவரது மேனேஜர் ஹரி கிருஷ்ணன் என்பவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், செப்.26ஆம் தேதி இரவு சிகப்பு நிற காரில் வந்த இருவர் விஷால் வீட்டை தாக்கினர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதாரமாக எங்கள் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை தருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் தற்போது துப்பறிவாளன் 2, மார்க் ஆன்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
லத்தி போஸ்ட் புரொக்டக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. நடிகர் விஷால் வீடு தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us