தமிழைத் தாண்டி இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'குருவாயூர் அம்பல நடையில்', தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் புதிய படம் எனப் பல்வேறு மொழிகளில் யோகி பாபு நடித்து வருகிறார்.
இவர், திரைப்படங்களைத் தாண்டி கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இவர் இன்று புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். இதற்காக புதுச்சேரிக்கு சென்ற யோகி பாபு, கும்பாபிஷேகத்தை முடித்தவுடன் சட்டப் பேரவைக்கு வந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு புறப்பட்டார். அப்போது யோகி பாபுவுக்கு திருநீர் இட்டு, ரங்கசாமி வாழ்த்தினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“