/indian-express-tamil/media/media_files/2024/11/11/vSCucBW1ynMqsZJT6zSs.jpg)
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு பேச்சு தொடர்பாக மதுரையில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நடிகை கஸ்தூரி ஐகோர்ட்டு கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத் தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த புகாரில் முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட் டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை செவ்வாய்கிழமை விசாரனணக்கு வர உள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.