தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் நவம்பர் 16-ம் தேதி ஐதராபாத்தில் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கஸ்தூரி கைது செய்யப்படுவதற்கு முன்பு வெளியிட்ட பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் சனிக்கிழமை (நவம்பர் 16) கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரை, நவம்பவர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி கைதாவதற்கு முன், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அவர் தலைமறைவாக இருந்ததாக வெளியான செய்திகள் குறித்து விளக்கம் கொடுத்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகை கஸ்தூரி தான் ஓடவும் எங்கேயும் தலைமறைவாக இல்லை, ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தேன், என் வீட்டில்தான் இருந்தேன், பயம் எல்லாம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: “நான் எங்கேயும் தலைமறைவாக இல்லை, ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தேன், என் வீட்டில்தான் இருந்தேன். ஷூட்டிங் முடிந்து வந்ததுக்கு அப்புறம்தான். ரொம்ப நார்மலாதான், நானே ஒத்துழைத்துதான் கூட்டிட்டு வந்தார்கள். இதுவரைக்கும் பத்திரிகையில் வந்த செய்திகளை நான் பார்க்கவில்லை. ஏனென்றால், எனக்கு அமைதியான மனநிலை தேவைப்பட்டது. போனை என்னுடைய வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டேன். இன்றைக்கு நான் பார்த்தேன். மீடியாவில் வந்து ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. தலைமறைவு, பயந்து, ஒடினார், அது, இது என்கிற எதிலுமே உண்மை கிடையாது. பயம்லாம் கிடையாது. இதுவரைக்கும் நான் எதுவும் விதிகளை மீறி பண்ணவில்லை. இனிமேலும் ஒத்துழைப்பேன். இப்போது, இன்றைக்கு வந்து எழும்பூர் போலீஸ் என்னை விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். அதற்கும் நான் முழுமையாக ஒத்துழைக்கப் போகிறேன். நான் இதுவரைக்கும் என் வீட்டில்தான் இருந்தேன். ஐதராபாத்தில் என் வீட்டில்தான் இருந்தேன். நான் ஷூட்டிங் போயிருந்தேன். ஒரு 4 நாள் ஷூட்டிங் போயிருந்தேன். அதனால், தலைமறைவு என்பதற்கெல்லாம் கேள்வியே இல்லை.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“