/indian-express-tamil/media/media_files/BPsPC5VEsWW1LmYjTYsT.jpg)
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிராக குஷ்பூ கருத்து தெரிவித்தபோது, அதில் அவர் பயன்படுத்திய சேரி என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் அதில் நடிகை த்ரிஷா தொடர்பாக தகாத கருத்தை தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு எதிராக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகன் என்று பல பிரபலங்களும்கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்தார். ’தங்களைப்போல், சேரி மொழியில் தன்னால் பேச முடியாது என்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்விழித்துப் பார்க்க வேண்டும்’ என்று பகிர்ந்தார். இந்நிலையில் குஷ்பூ பதிவில் பயன்படுத்தப்பட்ட சேரி மொழி என்ற வார்த்தைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில் “ அறியாமல் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக, தான் அதிக வலியை உணர்ந்தேன் , இந்த விவகாரத்தில் தான் ஒரு பெரிய பாடமாக இருந்ததாகவும்” அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன் தவறை உணர்ந்து குஷ்பூ விரைவில் இந்த பதிவை நீக்கிவிடுவார் என்றும், அதற்கு பொது மனிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள குஷ்பூ ” பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில்சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.