நடிகை ஷகிலா தனது அண்ணன் மகள் சீத்தல் என்பவரை 6 மாதக் கை குழந்தையாக இருக்கும் போதில் இருந்து வளர்த்து வருகிறார். தற்போது சீத்தலுக்கு 19 வயதாகிறது. இந்நிலையில் நேற்று கோடம்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் ஷகிலாவுக்கும் சீத்தலுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஷகிலாவை அடித்து கீழே தள்ளி விட்டு சீத்தல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஷகிலா தனது தோழியிடம் உதவி கோரியதையடுத்து அவர் அனுப்பி வைத்து சௌந்தரியா என்ற வழக்கறிஞர் ஷகிலா வீட்டிற்கு வந்து சீத்தலிடம் சமாதானம் பேச தொலைப் பேசியில் அழைத்துள்ளார்.
இதையடுத்து சீத்தல் தனது தாய் சசி, சகோதரி ஹமீலா உடன் ஷகிலா வீட்டிற்கு வந்துள்ளார்.
வழக்கறிஞர் சௌந்தரியா சமாதானப் பேச்சு நடத்தியபோது ஆத்திரமடைந்த சீத்தல் வழக்கறிஞரின் தலையில் தாக்கி ஷகிலாவையும் மிரட்டியதாக தெரிகிறது. மேலும் சீத்தலின் தாய் சசியும் வழக்கறிஞரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வழக்கறிஞர் சௌந்தரியா சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஷகிலா வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.