/tamil-ie/media/media_files/uploads/2023/09/vi1.jpg)
நடிகை விஜயலட்சுமி
சீமான் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடிகை விஜயலட்சுமி செயல்படுகிறார் என்று, தமிழக முழுவதிலும் உள்ள பல்வேறு காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் விஜயலட்சுமி மீது புகார் அளித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் “ அரசியலில் சீமானுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது அரசியல் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய லட்சுமி, வீரலட்சுமி உள்ளிட்டோர் சீமான் மீது பொய் புகார் கூறுகின்றனர். சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விஜயலட்சிமி உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த புகார் மனுவை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா மற்றும் நிர்வாகிகள் கொடுத்தனர். இதுதவிர பல்வேறு மாவட்டங்களில் விஜயலட்சுமி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் புகார் தெரிவித்து உள்ளனர். மதுரவாயல் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்திலும் விஜயலட்சுமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.