வழக்கு தொடர்ந்த சீமான்: விஜயலட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். விஜயலெட்சுமி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புகார் அளித்தார்.

நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். விஜயலெட்சுமி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புகார் அளித்தார்.

author-image
WebDesk
New Update
Actress Vijayalakshmi said that she is eager to see Seeman arrested

நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினார்கள்.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டுகளோடு ஏற்கனவே விஜயலட்சுமி புகார் ஒன்று அளித்தார்.

Advertisment

இந்தநிலையில், விஜயலெட்சுமி 12 ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் கட்சி மற்றும் கட்சி தலைவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வீரலெட்சுமி என்ற பெண்ணுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டு மீண்டும் புகார் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் விஜயலட்சுமி மீது புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: