/tamil-ie/media/media_files/uploads/2023/08/Vijayalakshmi-1.jpg)
நடிகை விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்.
இதனால் தாம் உடல் மற்றும் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கடந்த கால ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது தி.மு.க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் தாம் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பேஸ்புக் தளத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சீமான் கைதை காண ஆவலோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சீமானின் பேச்சுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் நம்பக் கூடாது. இதை நான் உங்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.