Advertisment

'கோர்ட் சண்டையெல்லாம் வேணாம்; பேசுங்கள்': விஜயலட்சுமி புதிய வீடியோ

'என் கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள்தான் என் கணவர் என்று வாழ்வேன். எதுக்கு எனக்கு இந்தத் தண்டனை? தயவு செய்து என்னிடம் பேசுங்கள்.. இந்தக் கோர்ட், சண்டை சச்சரவுகள் இதெல்லாம் தேவை இல்லை. நான் ஒன்றும் உங்கள் கள்ளக் காதலி கிடையாது.'

author-image
WebDesk
New Update
Seeman Vijayalakshm

கோர்ட் சண்டை எல்லாம் வேண்டாம்; என்னிடம் பேசுங்கள் என நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு அழைப்பு விடுத்துள்ள புதிய வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை விஜயலட்சுமி புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சீமான் மாமா நான் ரொம்ப கஷ்டத்தில் உள்ளேன். உங்க கிட்ட ஆயிரம் சண்டைப் போட்டாலும் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.

என் கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள்தான் என் கணவர் என்று வாழ்வேன். எதுக்கு எனக்கு இந்தத் தண்டனை? தயவு செய்து என்னிடம் பேசுங்கள்.. இந்தக் கோர்ட், சண்டை சச்சரவுகள் இதெல்லாம் தேவை இல்லை. நான் ஒன்றும் உங்கள் கள்ளக் காதலி கிடையாது.

Advertisment

Vijayalakshmi gives complaints Chennai police commissioner against Seeman and she angers media, actress Vijayalakshmi, நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார், விஜயலட்சுமி நீ முதல்ல வாய மூடுடா, ஊடகவியலாளரிடம் ஆவேசம், Actress Vijayalakshmi, Chennai police commissioner, Seeman, vijayalakshmi angers media

நீங்கள் யாருக்கும் பயப்பட தேவை இல்லை. நான் தற்போது ஒரு கட்டடத்தின் உச்சியில் நின்றுக் கொண்டு பேசுகிறேன். இந்த வீடியோவை சீமான் பார்க்க வேண்டும். இதை மீடியா ஒளிபரப்ப வேண்டும்.

14 ஆண்டுகாலம் நீங்கதான் என் கணவர் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நான் இதை உங்களிடம் ஏற்கனவே சொல்லியுள்ளேன். என்னால் உங்களை பிரிந்து வாழ முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Seeman angry clarification, Naam Tamilar Katchi, Seeman clarification on his controversy speech on Christians and Muslims are Santan's children, சீமான் சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன், நாம் தமிழர் கட்சி, சீமான் விளக்கம், Seeman, seeman controversy speech on Christians and Muslims are Santan's children

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்தப் புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி,  திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக கூறினார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு வந்தார். பின்னர் திடீரென அவரே வழக்கை வாபஸ் பெற்றார். தாம் கர்நாடகா செல்வதாகவும் கூறினார்.

இந்த நிலையில் அவர் தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Seeman Vijayalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment