Advertisment

இந்த பெரு நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: தமிழக பயணிகள் மகிழ்ச்சி

Chennai Tamil News: பெங்களூரு, கொச்சி, மும்பை, மைசூரு ஆகிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் கொண்டுவரப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
இந்த பெரு நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: தமிழக பயணிகள் மகிழ்ச்சி

Additional flights from Chennai to Bengaluru, Kochi, Mumbai and Mysore.

Chennai Tamil News: பெங்களூரு, கொச்சி, மும்பை, மைசூரு ஆகிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் கொண்டுவரப்பட உள்ளது.

Advertisment

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்றின் காரணத்தால் இந்தியாவில் பல்வேறு விதமான சேவைகள் முடக்கப்பட்டது. அவைகளின் ஒன்றான சென்னை விமான நிலைய சேவை தற்போது பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது.

publive-image

தொடர்ந்து உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகள் மற்றும் சென்னையை மையமாக வைத்து அதிக உள்நாட்டு விமான சேவைகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் விளைவாக, தற்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு இருவழி சேவைக்காக 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. வரும் காலங்களில் 22 விமான சேவைகளாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து, மாலை 6.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்படும் விமானம் இரவு 7.55 மணிக்கு சென்னையை வந்தடையும்.

அதன்பிறகு, இரவு 8.50 மணிக்கு சென்னையிலிருந்து மும்பைக்கு இரவு 10.45 மணியளவில் சென்றடையும்.

இதுவரை, சென்னை-மும்பை விமான சேவைக்காக 38 விமானங்கள் இயக்கத்தில் இருந்தது. தற்போது அதை 40 விமானங்களாக அதிகரித்திருக்கின்றன.

செப்டம்பர் 26ஆம் தேதியிலிருந்து, சென்னை-கொச்சிக்கு இருவழி விமான சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த விமானம் மாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் கொச்சி சென்றடையும், பின்பு மாலை 6.15 மணிக்கு கொச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு மணி நேர பயணத்தில் வந்தடையும். 

சென்னை-கொச்சி இடையே இதுவரை 8 விமான சேவைகள் உள்ளன. அவை தற்போது 10 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல, சென்னை-மைசூருக்கு இருவழி விமான சேவைக்கு அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் புதிதாக தொடங்கியுள்ளது. இந்த விமான சேவையை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து புறப்படும் விமானம் மைசூரிற்கு காலை 9.25 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு சென்றடையும். பின்பு, மைசூரிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு சென்னையை வந்தடையும்.

இவ்விமான சேவைகளின் பயணச்சீட்டு கட்டணமாக, ஒரு வழி கட்டணத்திற்கு ரூபாய் 4,678 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மூன்று நகரங்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் விமான சேவையினால் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment