ஐகோர்ட் கைது உத்தரவுக்கு எதிராக ஏ.டி.ஜி.பி ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு; புதன்கிழமை விசாரணை

கடத்தல் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி ஹெச்.எம். ஜெயராமை கைது செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

கடத்தல் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி ஹெச்.எம். ஜெயராமை கைது செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

author-image
WebDesk
New Update
adgp

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழக கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) ஹெச்.எம். ஜெயராமை கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடத்தல் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி ஹெச்.எம். ஜெயராமை கைது செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழக கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) ஹெச்.எம். ஜெயராமை கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் "தனது அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக" கீழ்வைத்தினான்குப்பம் (SC) எம்.எல்.ஏ 'பூவை' எம். ஜெகன் மூர்த்தியையும் உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

நீதிபதி பி. வேல்முருகன், ஏ.டி.ஜி.பி ஜெயராமை உடனடியாகக் காவலில் எடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், ஜெயராம் போன்ற அரசு ஊழியர்கள் "பொதுமக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்" என்றும், "சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் அல்ல" என்ற வலுவான செய்தி சென்று சேர வேண்டும் என்றும் நீதிபதி வேல்முருகன் கருத்து தெரிவித்தார்.

Advertisment
Advertisements

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை குறிப்பிடப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் சம்மதித்தனர்.

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு எந்த நிவாரணமும் வழங்க மறுத்துவிட்டது. மாறாக, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு எம்எல்ஏ-வுக்கு அறிவுறுத்தியது. அவ்வாறு செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நீதிமன்றக் கட்டிடத்திலிருந்து வெளியே வந்த ஜெயராம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu police

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: