/indian-express-tamil/media/media_files/wWavDfu9rNGHPqIkGyoY.jpg)
விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் – எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அமலாக்கத்துறை சோதனைக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இ.பி.எஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் @Vijayabaskarofl அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 21, 2024
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். @AIADMKOfficial
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.