/indian-express-tamil/media/media_files/T4TNx3HiaoEvfD4qpudk.jpg)
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க இ.பி.எஸ் டெல்லி பயணம்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார்.
வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை எடப்பாடி பழனிச்சாமி தனியாகச் சந்தித்து பேச உள்ளார். இரவு 8 மணிக்கு அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us