அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கூடுவதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம்:
அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம், ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழகத்தில், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்திற்கு அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்கள் தங்களுடைய அழைப்பிதழை கையில் எடுத்து வர வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான தமிழக துணை முதல்வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
August 2018
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் செயற்குழு கூட்டம் கூட்டுவதில் தீவிரமாக இருந்து வருகின்றனர். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் நியமனம், பொறுப்புகள் மற்றும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.