Advertisment

வானகரத்தில் இன்று அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: 20 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்

அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
AIADMK Announce  hunger strike On 27th June Kallakurichi hooch tragedy Tamil News

பரபரப்பான அரசியல் சூழலில், சென்னை வானகரத்தில் இன்று (டிச.15) அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. 

Advertisment

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த வகையில் அ.தி.மு.க. கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி செயற்குழுவை கூட்டியது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெறகிறது. 

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும்  என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். கூட்டம் தொடங்கியதும் முதலில், அ.தி.மு.க . நிர்வாகிகள் மறைவுக்கும், அரசியல் கட்சி தலைவர்கள் - முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. 

Advertisment
Advertisement

கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.  சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் குறித்து வியூகம் அமைப்பது, தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்புள்ளது. 

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment