Advertisment

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க போட்டி: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், நிச்சயம் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க போட்டி: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், நிச்சயம் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதிமுக கட்சியில் இரட்டை  தலைமை பிரச்சனை, கடந்த சில மாதங்களாக உச்சநிலை உள்ளது.  பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி, பன்னிர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கினார். பன்னீர் செல்வம் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியை நீக்கினார். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்நிலையில் அதிமுக எடப்பாடி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாத என்று பன்னீர் செல்வம் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோதுகூட பன்னீர்செல்வம் மற்றும் எடப்படி பழனிசாமி அருகில் அமர்ந்தனர், ஆனால் பேசிக்கொள்ளவில்லை.  மேலும் எடப்பாடி பழனிசாமி தான் உன்மையான அதிமுக என்று அவர்கள் தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம் அதிமுகவுக்கு அனுப்பபட்டபோது, ஓ பன்னீர் செல்வம் பெயரும் இருந்தது.  இதற்கு தமிழக தேர்தல் அதிகாரி விளக்கும் அளித்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக இத்தேர்தலில் போட்டியிட உள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுக, இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று பேட்டி அளித்தார்.

மேலும் அதிமுகவிற்கு, ஜி.கே. வாசன் ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment