மதுரைக்கு வருகை தரும் அமித்ஷா: 'இ.பி.எஸ் உத்தரவின் பேரில் அ.தி.மு.க வரவேற்பு' - ஆர்.பி. உதயகுமார் தகவல்

அமித்ஷாவின் வருகை, தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே உள்ள கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவின் வருகை, தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே உள்ள கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Udhaya

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மதுரை வருகையையொட்டி, அவரை வரவேற்கும் பணிகளில் அ.தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார், மதுரை விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், "தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், மதுரை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க வந்துள்ளோம். என்னுடன் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் இணைந்து அ.தி.மு.க. சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

அமித்ஷாவின் வருகை, தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே உள்ள கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

R B Udhaya Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: