/indian-express-tamil/media/media_files/2024/11/24/cPRhtZyVsegmafhrOp4e.jpg)
அதிமுக பொதுக்குழு கூட்டம் - தேதி அறிவிப்பு
சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(VII) மற்றும் 25(II)-ன்படி, வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
வரும் 2026ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி நடைபெற்று வரும் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் மோதிக் கொள்வதும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இந்தப் பொதுக்குழுவில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள், கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைச் சரி செய்வது, கூட்டணி உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.