/tamil-ie/media/media_files/uploads/2023/06/aiadmk-6.jpg)
அதிமுக தலைமையகம்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் மேற்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்த தீர்மானத்திற்கு தடை விதிக்க கோரி, பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதை வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக், ஜூன் 28ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, ஓ.பி.எஸ் தரப்பு சார்பில், இந்த வழக்குகளில் தங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் கூறாத நிலையில் தாம் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டார். மேலும், இடைக்கால தடை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டுமெனவும் எழுத்துப்பூர்வ வாதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், எட்டு மாதங்கள் மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடை கோர முடியாது என்று தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.