அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய அ.தி.மு.க

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய அ.தி.மு.க; குடும்பத்தினரிடம் நேரில் கொடுத்த நிர்வாகிகள்

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய அ.தி.மு.க; குடும்பத்தினரிடம் நேரில் கொடுத்த நிர்வாகிகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
admk ajith sivagangai

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சுற்றுப்பயணமாக வந்தபோது, காவல் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அ.தி.மு.க சார்பில் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

Advertisment

அந்தவகையில், இன்று சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் அஜித்குமார் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்திற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வரைவு காசோலையை வழங்கினர். இந்த நிகழ்வில் பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Admk Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: