/tamil-ie/media/media_files/uploads/2023/03/admk.jpg)
எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்திய அதிமுக மாவட்ட செயலாளர் மீது ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் , சென்னை தண்டையார் பேட்டையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் நடத்தினார். இந்த பொதுக்கூட்டதிற்கு காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையும் மீறி பொதுகூட்டம் நடத்தப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் அனுமதியின்றி கட்சியின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டது, எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டது மற்றும் அமைச்சராக இருக்கும் உதயநிதி பற்றி போலியான செய்திகள் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக திமுகவின் 42வது வட்டச் செயலாளர் தமிழ்செல்வன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட அதிமுக நிர்வாகிகள் மீது, ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் 5 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.