அஇஅதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை சுற்றியிருந்த படிக்கட்டுகள் இன்று அகற்றப்பட்டுள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் அஇஅதிமுகவின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் கட்சியை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றி இருந்த படிக்கட்டுகள் இன்று திடீரென்று அகற்றப்பட்டு, சிலை மட்டும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக தொண்டர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட இருப்பதால், படிக்கட்டுகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், அங்கு ஜெயலலிதாவின் சிலையும் நிறுவப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இனி தலைமை அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இருவரின் சிலைகளும் காட்சியளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.