தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையது – இ.பி.எஸ்

இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் – தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு

இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் – தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPS Stalin

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என தொகுதி மறுசீரமைப்பு குறித்த முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் அநியாயமான, ஊழல் நிறைந்த மற்றும் வம்ச ஆட்சியை வழிநடத்தும் அதே வேளையில், பொம்மை முதல்வர் "நியாயமான தொகுதி மறுசீரமைப்பு" பற்றிப் பேசுகிறார்.

முதலில், டாஸ்மாக் கொள்ளையை மறுசீரமையுங்கள். போதைப்பொருள் மாஃபியாவை மறுசீரமையுங்கள். சட்டவிரோத மதுபானத்தை மறுசீரமையுங்கள். ரவுடித்தனத்தை மறுசீரமையுங்கள். உங்கள் அமைச்சர்களின் ஊழல்களை மறுசீரமையுங்கள். மிக முக்கியமாக, உங்கள் குடும்பத்தின் ஆணவம் மற்றும் தமிழ்நாட்டின் மீதான பிடியை மறுசீரமையுங்கள்.

Advertisment
Advertisements

தமிழ்நாட்டின் கண்ணியம், காவிரி உரிமைகள் மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்காக அச்சமின்றிப் போராடிய உயர்ந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் அழியாத கொள்கைகளில் அ.தி.மு.க உறுதியாக நிற்கிறது.

ஒவ்வொரு தமிழருக்கும் முன்பாகவும் நான் சபதம் செய்கிறேன்: நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ அல்லது நமது குரல் அடக்கப்படவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

2027 ஆம் ஆண்டில், அல்லது தொகுதி மறுசீரமைப்பு எப்போது வந்தாலும், அ.தி.மு.க - மீண்டும் ஆட்சிக்கு வந்து - தமிழ்நாட்டின் உரிமையான குரலையும் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதுகாக்கும்.

மேலும் பொம்மை முதல்வருக்கு, ஒரு பணிவான செய்தி: உங்கள் தோல்விகளையும் மோசடிகளையும் மறைக்க இந்த கவனச்சிதறலைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். உங்கள் நாடகத்தாலும் முதலைக் கண்ணீராலும் தமிழக மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.

"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது ஸ்டாலின் இந்த ட்வீட். 

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போதே தெரிவித்தது நான். 

என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்! 

கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் தி.மு.க கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை! 

இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை. 

உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள். 

ஆனால் தமிழகத்தில் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்! 

திரு. ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்!

Mk Stalin Edappadi Palanisamy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: