ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி மீது அவதூறு பேச்சு; அ.தி.மு.க பிரமுகர் கைது

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி காந்தி மார்க்கெட் அதிமுக பகுதிச் செயலாளர் சுரேஷ் குப்தாவை போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி காந்தி மார்க்கெட் அதிமுக பகுதிச் செயலாளர் சுரேஷ் குப்தாவை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
sadesa

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி காந்தி மார்க்கெட் அதிமுக பகுதிச் செயலாளர் சுரேஷ் குப்தாவை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ப.மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா திமுக பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

Advertisment


இதுகுறித்து திமுக தொண்டரணி அமைப்பாளர் ஏ.தினகரன் அளித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் சுரேஷ் குப்தா மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மதியம் வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சுரேஷ் குப்தாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வழியில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர், திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார்.

Advertisment
Advertisements


இதற்கிடையே திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன், மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ், வனிதா, சசிகுமார், ஜெயராமன், முத்துமாரி, தினேஷ் பாபு , நசுருதீன் மற்றும் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து ஜாமின் தாக்கல் செய்தனர். இது குறித்த விவாதம் இரவு 11.30 மணி வரை சட்டப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் மருத்துவ அறிக்கை உடல்நலம் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீனில் சுரேஷ் குப்தா விடுவிக்கப்பட்டார்..

செய்தி: க.சண்முகவடிவேல் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: