’கூட்டணி முடிவு சரவெடி: இனி தான் அதிரடி’ : கோவையின் முக்கிய இடங்களில் அ.தி.மு.க-வினர் ஒட்டிய போஸ்டர்

கோவை நகரில் "கூட்டணி முடிவு சரவெடி" "இனி தான் அதிரடி" என்ற வாசகங்களுடன் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

கோவை நகரில் "கூட்டணி முடிவு சரவெடி" "இனி தான் அதிரடி" என்ற வாசகங்களுடன் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
tamil news

கோவை நகரில் "கூட்டணி முடிவு சரவெடி" "இனி தான் அதிரடி" என்ற வாசகங்களுடன் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

Advertisment

 தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக சமீபத்தில் வெளியேறியது. இந்நிலையில் மீண்டும் பாஜக அதிமுக இடையே கூட்டணி ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்தார்.

இந்நிலையில் "கூட்டணி முடிவு சரவெடி" என்றும் "இனிதான் அதிரடி" என்ற வாசகங்களுடன் 40க்கு 40 என்று மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறிப்பிட்டு அதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது. கோவை லங்கா கார்னர், டவுன்ஹால், காந்திபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது. "கூட்டணி முடிவு சரவெடி" என்ற வாசகங்கள் பாஜகவுடன் கூட்டணியை முழுமையாக முறித்து கொண்டதை  குறிக்கும் விதமாகவே தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

 செய்தி: பி.ரஹ்மான்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: