/indian-express-tamil/media/media_files/2025/04/29/5lbfyyEbwX5KUjOjcpns.jpg)
சட்டப்பேரவையில் 'ஊர்ந்து' என்ற சொல்லை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தியதாகக் கூறி, அ.தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
அப்போது, "அரசு தலை நிமிர்ந்து இருக்கிறதா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். பார்ட் 2, பார்ட் 3 என்று முதலமைச்சர் கூறுகிறார். தமிழ்நாட்டில் எப்போதும் பார்ட் 2 தோல்வி தான்" என்று அ.தி.மு.க உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
இடனிடையே, முதலமைச்சரின் பதிலுரையின் போது 'ஊர்ந்து' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அ.தி.மு.க-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அந்த சொல்லை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. தவழ்ந்து, ஊர்ந்து என்று நான் சொன்னது யாரையாவது குறிக்கிறது என்று சொன்னால், அதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.