/indian-express-tamil/media/media_files/UmWHB2oK9eIwIjaNOBAK.jpg)
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை தி.மு.க கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அ.தி.மு.க பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் மாநில ஆளுநர்கள் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து வழங்க உள்ளார். இந்நிலையில், ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
மாநில அரசு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன. தொடர்ந்து காங்கிரஸ், தமிழ்நாட்டின் நலனுக்கும், அரசுக்கு எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கின்றன என்று கூறியுள்ளது.
இந்தநிலையில், சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை அளிக்கும் தேநீர் விருந்தில் அ.தி.மு.க பங்கேற்கும் என அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.