பூத் சிலிப்புடன் பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினர் தப்பியோட்டம் - திமுக புகார்

பூத் சிலிப்புடன் பணத்தை விநியோகம் செய்த அதிமுகவினர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூத் சிலிப்புடன் பணத்தை விநியோகம் செய்த அதிமுகவினர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
பூத் சிலிப்புடன் பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினர் தப்பியோட்டம் - திமுக புகார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் 179-வார்டுக்கு உட்பட்ட சிங்காரவேலன் நகரில் பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்து திமுக கட்சியினர் அவர்களை பிடிக்க சென்றபோது, அதிமுகவினர் பணத்தையும், பூத் சிலிப்பையைும் அங்கையே போட்டுவிட்டு தப்பியோடியாக சொல்லப்படுகிறது.

Advertisment
Advertisements

இதுதொடர்பாக காவல் துறையினரிடம் புகாரளித்த திமுகவினர், பூத் சிலிப்புகள் மற்றும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

பூத் சிலிப்புடன் பணத்தை விநியோகம் செய்த அதிமுகவினர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Local Body Polls Local Body Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: