வக்கீலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய நண்பன்: ஓசூர் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அவருடைய நண்பனே சரமாரியாக அரிவாளல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அவருடைய நண்பனே சரமாரியாக அரிவாளல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
advocate attack

ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் வழக்கறிஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அவருடைய நண்பனே சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஏரி தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், இவர் ஒசூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள பிரபல வழக்கறிஞர் சத்திய நாராயணா என்பவரிடம் ஜூனியராக வழக்கறிஞராக உள்ளார். 

அதே போல, ஓசூர், நாமல்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தகுமார், இவர் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், வழக்கறிஞர் கண்ணன், வழக்கம் போல, ஒசூர் நீதிமன்றத்தில் பணியை முடித்து வழக்கறிஞர் ஆடையுடன் நீதிமன்ற வளாகத்தில் நடந்து சென்றார். அப்போது, அங்கே வந்த ஆனந்த்குமார் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். கண்ணன் அங்கிருந்து ஓட முயன்றபோதும் இவர் துரத்தி வெட்டியுள்ளார். இதில் வழக்கறிஞர் கண்ணனுக்கு, கழுத்து, தலை, முதுகு உள்பட 5 இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். பரபரப்பாக இருக்கும் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நடந்தபோது, யாரும் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

அரிவாளாள் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அழைத்துச் சென்று, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் வழக்கறிஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்டு தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒசூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டிய ஆனந்தகுமார் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நின்றிருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளையும் கைப்பற்றினர்.

 ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் வழக்கறிஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Krishnagiri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: