New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/NR-Elango-MK-Stalin.jpg)
மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை விசாரிக்க அமலாக்கதுறைக்கு அதிகாரம் இல்லை எனவும் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ கூறினார்.
அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அளிக்கும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்குரைஞருமான என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.
மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை விசாரிக்க அமலாக்கதுறைக்கு அதிகாரம் இல்லை எனவும் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ கூறினார்.
dmk | enforcement-directorate | திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் இன்று (நவ.28) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “அரசு அதிகாரிகளை அழைக்கும் போது பிரிவு 50, 2இன் கீழ் சம்மன் கொடுக்க அதிகாரம் கிடையாது. இ.டி. சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றால், காவல்துறையால் வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
மேலும், மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை விசாரிக்க அமலாக்கதுறைக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக அரசின் புலன் விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் தந்து தான் விசாரிக்க வேண்டும்.
பாஜகவின் கையாளாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. மேலும், அதிமுக மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
நாடு முழுக்க மணல் கொள்ளை தொடர்பாக தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2024 தேர்தலை எதிர்நோக்கி உள்ள நேரத்தில், திமுக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் 4730 கோடி ருபாய் அரசிற்கு வந்திருக்க வேண்டியது வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.
மேலும், இந்த வழக்கை முழு விசாரணைக்கு வரும் 21 ஆம் தேதி எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.