வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் டிசம்பர் 17 முதல் மீண்டும் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களுக்கு டிசம்பர் 17 முதல் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் நிலவிய மேலடுக்கு சுழற்சி கடல் மட்டத்மட்டத்திலிருந்து 3.1 கி.மீ உயரம் வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறியது.
அதன்பிறகு, அடுத்த இரண்டு நாட்களில் இது மேலும் குறிப்பாக மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 17 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச. 18 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலில் செறிவூட்டப்பட்ட அமைப்பு படிப்படியாக பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மழையின் அளவு டிசம்பர் 19 முதல் குறைய வாய்ப்புள்ளதாகவும் அப்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“