தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே வாரம் 3 சிறப்பு சேவையை மீண்டும் தொடங்குவது உள்பட சில திட்டங்களுக்கு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக தெற்கு ரயில்வே காத்திருக்கிறது.
கோயம்புத்தூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயணிக்கும் பொதுமக்களின் தேவைகளை வலியுறுத்தி, எம்.பி., பி.ஆர்.நடராஜன் இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
இதற்குப் பதிலளித்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங், “புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரம் ரயில்வே வாரியத்திடம் உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள முனையக் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை” எனப் பதிலளித்துள்ளார்.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“