நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க, 200 மெ.டன் பாரமரிய நெல் ரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், உள்ள முக்கிய அறிவிப்புகள் “ நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க, 200 மெ.டன் பாரமரிய நெல் ரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
. 12,500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும். அசாடிராக்டின் பயன்பாட்டிற்காக வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“