மதுராந்தகம் அருகே 100 அடி உயர அ.தி.மு.க கொடிக் கம்பம் சாய்ந்து ஒருவர் பலி
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர அ.தி.மு.க கொடிக்கம்பம் கழற்றி மாட்டும்போது கொடிக்கம்பம் சாய்ந்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் பலியானார்.
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர அ.தி.மு.க கொடிக்கம்பம் கழற்றி மாட்டும்போது கொடிக்கம்பம் சாய்ந்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் பலியானார்.
Advertisment
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த ஜூலை மாதம் 100 அடி உயர அ.தி.மு.க கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மதுராந்தகம் அருகே இந்த 100 அடி உயர அ.தி.மு.க கொடிக் கம்பத்தில் பறந்த அ.தி.மு.க கொடியை மாற்றுவதற்காக இன்று (டிசம்பர் 15) கிரேன் மூலம் கழற்றியபோது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த 100 அடி உயர கொடிக் கம்பத்தில் பறந்த அ.தி.மு.க கொடியைக் கழற்றி மாற்றுவதற்காக கொடிக் கம்பம் கிரேன் மூலம் கழற்றி மாட்டும்போது, அ.தி.மு.க கொடிக் கம்பம் ஒரு பகுதி முறிந்து தவறி விழுந்ததில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் சிக்கி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
100 அடி உயர அ.தி.மு.க கொடிக்கம்பம் கழற்றி மாட்டும்போது கொடிக்கம்பம் சாய்ந்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்லப்பன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”