/tamil-ie/media/media_files/uploads/2023/06/ADMK-Trichy.jpg)
திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை எதிரே திருச்சி அதிமுக மாநகர், புறநகர் மாவட்டங்கள் சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்.பி.க்கள் ப.குமார், ரத்தினவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் குமார் பேசுகையில், “ ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் இருப்பதுபோல டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளார்.
மதுப்பிரியர்களிடம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 தனியாக வாங்கி கல்லா கட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி போக்குவரத்துத்துறையில் அமைச்சராக இருந்தபோது அப்பாவி மக்களிடம் லட்சக்கணக்கில் வாங்கி கோடிகளை கொள்ளையடித்தார். இதுதெரிந்த ஜெயலலிதா அவரை உடனேயே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டார்.
கல்லக்குடியில உள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் உள்ளே புகுந்து கல்லக்குடி திமுக பேரூராட்சி தலைவர் தாக்குதல் நடத்தியுள்ளார்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக தொண்டர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.