/tamil-ie/media/media_files/uploads/2023/06/Alanthur-Valarmathi1.png)
ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து புகார் மனு அளித்த அ.தி.மு.க.வினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.
சென்னையை அடுத்த ஆலந்தூரில் தொடர் மின்வெட்டுகள் நிலவிவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக அதிமுகவினர் ஆலந்தூர் மின்சார அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் கருப்பையாவை சந்தித்து மனு அளித்தனர்.
இதற்கு முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமை தாங்கினார். இந்த நிலையில் இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் திமுகவினர் அங்கு கூடினர். அவர்கள் அதிமுகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த நிலையில், ஒவருக்கொருவர் மோதிக்கொண்னர்.
இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் முன்னிலையில் திமுக, அதிமுகவினர் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.