Kp Munusamy | “மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து களமிறக்க வேண்டும்” என்று அ.தி.மு.க, பாரதிய ஜனதாவை வலியுறுத்தியுள்ளது.
, கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வியாழக்கிழமை (பிப்.29) பேசுகையில், “தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகனை போட்டியிட வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக செய்து வந்தது.
அதற்கு முன்னதாக எல்.முருகனை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கிவிட்டார்கள். ஏனெனில் இங்கு போட்டியிட்டு அவரால் வெல்ல முடியாது” என்றார்.
அ.தி.மு.க உறவை முறித்துக் கொள்வதற்கு முன்னதாக பா.ஜ.க அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 2019 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது.
இந்த நிலையில், கே.பி. முனுசாமி, “தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் மத்திய அமைச்சர்கள் சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை மாநிலத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட வைக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “தமிழக மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற தைரியமும் நம்பிக்கையும் பாஜகவுக்கு இருந்தால், இந்த இரண்டு மத்திய அமைச்சர்களையும் இங்கிருந்து போட்டியிட வைக்கட்டும். இது திராவிட மண்” என்றார்.
இந்த நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளால் தமிழகம் பல துறைகளில் சீரழிந்துள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு பதிலளித்த முனுசாமி, கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகிய துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.
மேலும், “தமிழக மக்கள் நிலைமை குறித்து நன்கு அறிந்தவர்கள், யார் ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவு பெற்றவர்கள். இதனால்தான் கடந்த 50 ஆண்டுகளாக தேசிய கட்சிகள் இங்கு காலூன்ற முடியாமல் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன’’ என்றார்
இதையடுத்து, வரும் தேர்தலில் பாஜக 300 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகிறது என்றார்.
தொடர்ந்து, “மற்றொரு திராவிடக் கட்சியான திமுகதான் எங்களுக்குப் போட்டியாளர், நீங்கள் (பாஜக) அல்ல. நீங்கள் இங்கே இரண்டாவது பெரிய கட்சி என்று இப்போது நீங்கள் கூறலாம், ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான், நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், எத்தனை தொகுதிகளில் தேர்தலில் டெபாசிட் செய்த பணத்தைக் கூட இழக்க நேரிடும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.
முனுசாமியின் கருத்துக்கள் ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி செய்தி சேனலின் தேர்தலுக்கு முந்தைய பகுப்பாய்வுகளை அடுத்து வந்துள்ளன, இது பாஜக 18 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் கணித்திருந்தது. இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : AIADMK dares BJP to field Jaishankar, Nirmala Sitharaman from Tamil Nadu for Lok Sabha polls
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“