Advertisment

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: ஓ.பி.எஸ் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
அ.தி.மு.க பொதுக் குழு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

Advertisment

கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்ததை எதிர்த்து, அக்கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், இரண்டு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். அந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமியை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், “ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறுவது உண்மையில்லை. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மட்டுமே அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் தீர்மானங்களை பற்றி அவர் கேள்வி எழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனுவில் கூறியிருந்தனர்.

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்வு முன்பு இன்று (நவம்பர் 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பி.எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்; இந்த வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் , எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பொருத்தவரையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் உடனடியாக இந்த வழக்கை விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஏனெனில், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்தது என்பதால் பொதுக்குழு நடண்து 6 மாதங்கள் ஆகிறது. அதனால், இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு ஓ.பி.எஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு ஒ.பி.எஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ops Eps Aiadmk Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment